குரங்கணி தீவிபத்தில் படுகாயமடைந்த பெண் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கோவை வருகை

குரங்கணி தீ விபத்தில் படுகாயம் அடைந்த சென்னையை சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

கோவை : குரங்கணி தீ விபத்தில் படுகாயம் அடைந்த சென்னையை சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.



தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயில் சிக்கி மலையேற்ற பயிற்சிக்காக சென்ற 9 பேர் பலியாகினர். இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மதுரை, தேனி போன்ற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தீ விபத்தில் படுகாயமடைந்த சென்னையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ (32), தனியார் மருத்துவமனையின் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக கோவை அழைத்து வரப்பட்டார். தீ காயமடைந்த ஜெயஸ்ரீயுடன் அவரது தாயார், மருத்துவர் உட்பட 4 பேர் உடன் வந்தனர். ஒரு மணி நேரத்திற்கும் குறைவான காலத்தில் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டார்.



கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனி அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சையானது அளிக்கப்பட இருக்கிறது. 70 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தோல் சிகிச்சைகள் வழங்க கோவை தனியார் மருத்துவமனையில் சிறப்பு வசதிகள் இருப்பதால், ஜெயஸ்ரீயின் பெற்றோர் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...