சிறையில் மரணமடைந்த கைதியின் உடல் அடக்கம் : சீமான், தனியரசு ஆகியோர் மரியாதை

கோவை சிறையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த கைதி ரிஸ்வானின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

கோவை : கோவை சிறையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த கைதி ரிஸ்வானின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. 

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள்தண்டனைக் கைதியான ரிஸ்வான் உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். சிறையில் முறையான சிகிச்சை அளிக்காததால் தான் அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் குற்றம்சாட்டினர். இந்த நிலையில், ரிஸ்வானின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து ஊர்வலமாக மேம்பாலம் வழியாக ப்ரூக்பாண்ட் சாலையைக் கடந்து, ஹைதர் அலி திப்பு சுல்தான் தக்னி சுன்னத் ஜமாத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, உடல் வைக்கப்பட்டு, அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க ஊர்வல கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.



பின்னர், ரிஸ்வானின் உடல் சாய்பாபா காலனியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு மற்றும் இஸ்லாமிய இயக்கங்களைச் சேர்ந்த பலர் மரியாதை செலுத்தினர். பின்னர், மீண்டும் பூமார்க்கெட்டில் உள்ள பள்ளி வாசலுக்கு உடல் கொண்டு வரப்பட்டு, அவருக்கு இஸ்லாமியர் முறைப்படி கடைசி மரியாதை செலுத்தப்பட்டது. இறுதியில், ரிஸ்வானின் உடல் பூமார்கெட் பள்ளிவாசலில் உள்ள மைதானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.



ரிஸ்வானின் இறுதிச் சடங்கையொட்டி, கோவை அரசு மருத்துவமனை, சாயிபாபா காலனி, வடகோவை, பூமார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...