கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற "பல்லுயிர் மற்றும் அதன் பாதுகாப்பு" கருத்தரங்கு குறித்த தேசிய பத்திரிக்கை வெளியிடப்பட்டது.
கோவை : கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற "பல்லுயிர் மற்றும் அதன் பாதுகாப்பு" கருத்தரங்கு குறித்த தேசிய பத்திரிக்கை வெளியிடப்பட்டது.
மண்வளம், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மையில் அவற்றின் முக்கியத்துவம் பற்றி நடைபெற்று வரும் நிகழ்கால ஆராய்ச்சிகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்து அறிவியல் மாணவர்கள் மற்றும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக "பல்லுயிர் மற்றும் அதன் பாதுகாப்பு" என்ற தலைப்பில் இரண்டு நாள் விரிவுரை கருத்தரங்கம் இன்று தொடங்கியது. உஷா கீர்த்திலால் மேத்தா கலையரங்கில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் ஆர். சரவண செல்வன், "பல்லுயிர் மற்றும் அதன் பாதுகாப்பு" கருத்தரங்கின் தேசிய பத்திரிக்கையை வெளியிட்டார். அதனை சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் மதிவாணன் பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் ஆர். சரவண செல்வன் ஃபைட்டோஸ்பெக்ட்ரம் இதழை வெளியிட்டார்.