திருப்பூரில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் திறப்பு

திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையம் பகுதியில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் திறக்கப்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையம் பகுதியில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் திறக்கப்பட்டது. 

இந்த விழாவிற்கு மாநில நுகர்வோர் நீதிமன்ற தலைவர் எஸ்.தமிழ்வாணன் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். இதில், மாவட்ட காவல் ஆணையர் பி. நாகராஜன், கோவை மாவட்ட நீதிமன்ற தலைவர் பாலசந்திரன், திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி உட்பட ஏராளமான வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாநில நுகர்வோர் நீதிமன்ற தலைவர் எஸ். தமிழ்வாணன் கூறுகையில், " தமிழகத்தில் 32 மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன. நுகர்வோர் ஒரு பொருளை வாங்கும் போது உள்ள குறைபாடு, அதன் தரம், எம்.ஆர்.பி.ரேட், காலாவதி தேதி உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளன. சமையல் எரிவாயு, எலக்டிரிசிட்டி, ஏற்றுமதி உள்ளிட்ட அனைத்தும் உள்ளடங்கும். இழப்பீடு 1986-ம் ஆண்டு சட்டத்தின்படி மாவட்ட நீதிமன்றத்திற்கு அதிகபட்சம் ரூ. 20 லட்சம் வரையிலும், அதற்கு மேல் ரூ. 1 கோடி வரை மாநில நீதிமன்றத்திற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நுகர்வோர் நீதிமன்றங்கள் இருப்பது நியாயங்கள், நீதி வழங்குவதற்காகத் தான் செயல்படுகின்றது." எனத் தெரிவித்தார்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...