கண்டெய்னர் லாரி - ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி

கோவை எல் அன்டி பைப்பாஸ் சாலையில் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி, ஆம்புலன்ஸ் மீது மோதியதில் 3 பேர் பலியாகினர்.

கோவை: கோவை எல் அன்டி பைப்பாஸ் சாலையில் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி, ஆம்புலன்ஸ் மீது மோதியதில் 3 பேர் பலியாகினர்.

சூலூர் அருகே உள்ள சிந்தாமணிப்புதூர் பகுதியில் கும்பகோணம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமைய்யன் மகன் பசுபதி (35) என்பவர் வசித்து வருகிறார். இவர், சிங்காநல்லூர் பகுதியிலுள்ள தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவர், எல் அன்டி பைபாஸ் சாலையின் அவினாசி சாலை சந்திப்பு பகுதியில் தனது வாகனத்தை நிறுத்துவது வழக்கம். நேற்று இரவு வழக்கம்போல, இவர் அப்பகுதியில் பணியில் இருந்துள்ளார். இவருக்கு துணையாக அவரது நண்பர் ராஜேஷ் என்பவரும் உடன் இருந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை பணி முடிந்து சிந்தாமணிப்புதூரில் உள்ள தனது வீட்டிற்கு கிளம்பியுள்ளார். அப்போது, எல் அன்டி சுங்கச்சாவடியில் சுங்கம் வசூலிக்கும் பணியில் இருந்த சக்திவேல் என்பவரும் பணி முடிந்து ஆம்புலன்சில் லிப்ட் கேட்டு வந்துள்ளார். இவர்கள் வந்த வாகனம் பைபாஸ் சாலையில் அத்தப்பகவுண்டன் புதூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென எதிரே வந்த கண்டெய்னர் லாரி ஆம்புலன்ஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், பசுபதி மற்றும் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த சக்திவேல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பலியானார்.

கோவையின் பிரதான சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...