காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கு அரசுப் பணி வழங்கக் கோரி கோவையில் ஆர்ப்பாட்டம்

காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கு அரசு பணியிடங்களில் பணி நியமனம் வழங்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கோவை: காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கு அரசு பணியிடங்களில் பணி நியமனம் வழங்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.



மத்திய, மாநில அரசுப் பணிகளில் காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கு வழங்கப்படும் ஒரு சதவீத வேலை வாய்ப்பினை உடனடியாக வழங்க வலியுறுத்தி கோவை மாவட்ட காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதோர் சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

முன்னதாக, இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பின்னர், சைகை முறையில் பேசிய அவர்கள், "கடந்த பல ஆண்டுகளாக வேலை வாய்ப்புகள் நிராகரிக்கப்பட்டு வருகின்றது. அரசு அலுவலகங்களுக்கு சென்று தகவல் அறிய முற்பட்டால் எங்களை அலைகழிகின்றனர். மேலும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் இது வரை பலருக்கு வேலை கிடைக்கவில்லை.

ஒரு சதவீத வேலை வாய்ப்பை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி துடியலூர் வேலை வாய்ப்பு அலுவலத்தை முற்றுகையிட உள்ளோம். இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...