தேனியில் காட்டுத்தீயில் சிக்கிய கல்லூரி மாணவிகள் : சூலூரில் இருந்து விரைந்தது ஹெலிகாப்டர்



தேனி: தேனி மாவட்ட வனப்பகுதிக்குள் டிரக்கிங் சென்ற கல்லூரி மாணவிகள் காட்டுத் தீயில் சிக்கி போராடி வருகின்றனர். 

மகளிர் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணிக்கு திருப்பூர் மற்றும் ஈரோட்டை சேர்ந்த கல்லூரி மாணவிகள் 40 பேர் டிரக்கிங் சென்றனர். 

இந்த நிலையில், வனப்பகுதிக்குள் இன்று திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது  இந்த தீ மளமளவென வனம் முழுவதும் பரவியது. 

இதனால், டிரெக்கிங் சென்ற மாணவிகள் காட்டுத் தீயில் சிக்கி போராடினர். 

இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது  தகவலின் பேரில் தீயணைப்பு வாகனம் மற்றும் வனப் பாதுகாவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

கடுமையான போராட்டத்திற்கு பிறகு 12 பேரை தீயணைப்பு படையினர் மீட்டனர். 

இந்த தகவலறிந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமன், கோவை மாவட்டம் சூலூர் விமான படைதளத்தில் இருந்து இரண்டு ஹெலிகாப்டர்களை மீட்பு பணிக்கு அனுப்ப உத்தரவிட்டார். 

அதன்பேரில், சூலூரில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிக்காக சென்றது. அதில் 20 பேர் கொண்ட மீட்புக் குழுவினர் உள்ளனர். மேலும், தண்ணீர் டேங்குகள், கயிறு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் தீயில் இறங்கி மீட்புப் பணியை மேற்கொள்ளத்தக்க உடைகள் ஆகியவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...