மாணவர்களுக்கு தொழில் தொடர்பான பயிற்சி அளித்த 'பை தி ஸ்டார்ட்-அப்'

கல்லூரி மாணவர்கள் வருங்கால தொழில் முனைவோர்களாக உருவெடுப்பதற்கான பயிற்சியை 'பை தி ஸ்டார்ட்-அப்' நிறுவனம் வழங்கியது.


கோவை : கல்லூரி மாணவர்கள் வருங்கால தொழில் முனைவோர்களாக உருவெடுப்பதற்கான பயிற்சியை 'பை தி ஸ்டார்ட்-அப்' நிறுவனம் வழங்கியது. 

கோவையை அடித்தளமாகக் கொண்டு 'பை தி ஸ்டார்ட்-அப்' என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. காயத்ரி ராஜேஷ் மற்றும் சமீர் ஆகியோரது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இந்த நிறுவனம் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு மூலதனம், பயிற்சி மற்றும் தொழிலை வெற்றிகரமாக நடத்த மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை தொழில் முனைவோருக்கு ஏற்படுத்தித் தருகிறது இந்த நிறுவனம். 



இந்த நிலையில், மதுக்கரை அருகே உள்ள எஸ்.என்.டி. கல்லூரியின் முதுநிலை வணிக நிர்வாக துறை மாணவர்கள் 65 பேருக்கு தொழில் தொடங்குதல் தொடர்பான பயிற்சி மற்றும் ஆலோசனை நேற்று வழங்கப்பட்டது. 'பை தி ஸ்டார்ட்-அப்' நிறுவனம் சார்பில் வெற்றிகரமாக இயங்கி வரும் தொழிற் கூடங்களுக்கு கல்லூரி மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். 

இது குறித்து 'பை தி ஸ்டார்ட்-அப்' நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான சமீர் கூறியதாவது, "கோவை ஸ்டார்ட்-அப் ரவுண்ட் என்ற பெயரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களை வெற்றிகரமாக இயங்கி வரும் நான்கு தொழில் நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்றோம். அங்கு தொழில் முனைவோருடன் மாணவர்கள் நேரடியாக பேசினார்கள். ஒரு தொழிலை எப்படி வெற்றிகரமாக செய்வது? அதற்கான முதலீடுகளை எப்படி திரட்டுவது? போன்ற மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு தொழில் முனைவோர்கள் விளக்கமளித்தனர். இந்த பயிற்சி வரும் காலத்தில் மாணவர்கள் ஒரு வெற்றிகரமான தொழில் முனைவோராக மாற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை." என்றார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...