கோவை மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனங்களை வழங்கினார் அமைச்சர்

கோவையில் பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனங்களை வழங்கினார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

கோவை : கோவையில் பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனங்களை வழங்கினார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

கடந்த மாதம் 24-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் தமிழகத்தில் ஒரு கோடி பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி சென்னையில் தொடங்கி வைத்தார். 

கோவை மாவட்டத்தில் இருந்து இந்த மானிய விலை இருசக்கர வாகனத்தைப் பெற 8 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 3,940 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மானியம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சி மற்றும் நகராட்சி, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் பயனாளிகளுக்கு மானியத்திற்கான காசோலை வழங்கினார். முதற்கட்டமாக, கோவையில் ஒரு திருநங்கை உள்பட145 பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், "அனைத்து மகளிரும் ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஒட்ட வேண்டும். தமிழகத்தில் 6.30 லட்சம் சுய உதவிக் குழுக்கள் உள்ளது. 95 லட்சம் பேர் குழுக்களில் உள்ளனர். இவர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் தான் அதிக கடன் வழங்கி உள்ளனர். என்னுடைய துறையின் கீழ் சுய உதவிக் குழுக்கள் உள்ளது. எனவே பெண்கள் எந்தத் தொழில் துவங்குவதாக இருந்தாலும் அணுகலாம்." என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...