இன்னும் நமக்கு ஆட்கள் தேவை : கமல் பேச்சு

செய்ய வேண்டிய வேலை அதிகமாக உள்ளது என்றும் அதற்கு இன்னும் ஆட்கள் தேவை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவனர் கமலஹாசன் பேசியுள்ளார்.


கோவை : செய்ய வேண்டிய வேலை அதிகமாக உள்ளது என்றும் அதற்கு இன்னும் ஆட்கள் தேவை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவனர் கமலஹாசன் பேசியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவனர் கமலஹாசன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்தார் விமானம் மூலம் கோவை வந்தார். கோவையில் இருந்து சாலை மார்க்கமாக ஈரோடு புறப்பட்டார். அப்போது, அவினாசி புதிய பேருந்து நிலையம் அருகில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கமலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

அப்போது அவர் பேசுகையில், "எந்த தைரியத்தில் அரசியலுக்கு வந்தீர்கள்? என்று கேட்டார்கள். உங்களை நம்பித்தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். நல்ல தமிழகம் அமைய வேண்டுமென்றால் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும்." என்றார். 



தொடர்ந்து ஈரோட்டில் தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், " நாம் செய்ய வேண்டிய வேலை அதிகமாக உள்ளது. இன்னும் நமக்கு ஆட்கள் தேவை. கட்டுப்பாடு நம் கட்சிக்கு அவசியம். அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும். கட்சிக்கு புதிதாக வந்தவர்களுக்கு இந்த கட்டுப்பாடுகளை சொல்லிக் கொடுங்கள். நாம் எல்லோரும் இணைந்தால் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமையும். உங்கள் ஊர் குளம் சுத்தமாகும் அதற்காக உங்களுக்கு கை கொடுக்க வந்திருக்கிறது மக்கள் நீதி மையம். நான் வாக்குறுதி கொடுக்க முடியாது. உங்கள் பிரச்சினை குறித்து கலந்து ஆலோசிக்க அறிஞர் குழு இங்கே வரும். அவர்கள் மூலம் உங்கள் எண்ணங்களைப் புரிந்து கொள்வேன்." என்றார்.

நிகழ்ச்சியில், தொண்டரின் பெண் குழந்தைக்கு கமலரஞ்சிதம் என்று பெயர் சூட்டினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...