துப்பாக்கி முனையில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் கொள்ளை முயற்சி

கோவை துடியலூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபரிடம் போலீஸ் என்று கூறி துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : கோவை துடியலூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபரிடம் போலீஸ் என்று கூறி துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய மர்ம நபர்கள்  பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்பிர்த் சிங் (60). ரியல் எஸ்டேட் தோழில் செய்து வரும் அவரது வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவர் போலிசார் போல வந்தார். மேலும், தொழிலில் பாதுகாப்பு தருவதாக கூறினார். இதை ஹர்பிர்த் சிங் மறுத்துள்ளார். இந்த நிலையில், ஹர்பிர்த் சிங் நேற்று தனது காரில் மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது போலீஸ் என்று கூறிய அவரை வழிமறித்த மூன்று பேர் பாதுகாப்பு காரணங்களை சொல்லி அவரது காரில் ஏறினர்.

கார் சிறிது தூரம் சென்றதும், அந்த நபர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த ஹர்பிர்த் சிங் கூச்சலிட்டார். 

இதனால் பயந்து போன மர்ம நபர்கள் துப்பாக்கியை காருக்குள்ளேயே விட்டு விட்டு தப்பி ஓடினர். இந்த சம்பவம் குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் ஹர்பிர்த் சிங் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். அத்துடன் காருக்குள் விட்டுச்சென்ற அந்த துப்பாக்கியை எடுத்து பரிசோதித்தனர்.  அப்போது அது பொம்மை துப்பாக்கி என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து போலி ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...