சர்வதேச அளவில் முதலிடம் பிடித்த டெல்லி விமான நிலையம்

சர்வதேச விமான நிலைய சேவை தரவரிசை பட்டியலில் இந்தியாவின் டெல்லி விமான நிலையம் முதலிடம் பிடித்துள்ளது.

சர்வதேச விமான நிலைய சேவை தரவரிசை பட்டியலில் இந்தியாவின் டெல்லி விமான நிலையம் முதலிடம் பிடித்துள்ளது. 

சர்வதேச விமான நிலைய கவுன்சில், சர்வதேச அளவில் பரப்பளவு மற்றும் பயணிகள் வந்து செல்லும் விகிதத்தின் அடிப்படையில், விமான நிலையங்களின் சேவைத் தரத்தினை ஆண்டுதோறும் ஆராய்ந்து வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான தரவரிசைப்பட்டியலை அந்த கவுன்சில் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த விமான நிலையத்தில் ஆண்டுதோறும் 4 கோடிக்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர். 

மேலும், கடந்த ஆண்டு மட்டும் இங்கு 6 கோடி பயணிகள் வேறு நாடுகளுக்கு பறந்து உள்ளனர். இதன் அடிப்படையில், இந்திராகாந்தி விமான நிலையம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் சீனாவின் பெய்ஜிங் விமான நிலையமும், மூன்றாவது இடத்தில் தைவானின் தைபேய் நகர விமான நிலையமும் உள்ளன. கடந்த ஆண்டு தென்கொரியாவின் இன்சியான் விமான நிலையம் இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...