கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி

கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து வால்பாறை இன்று விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.


பொள்ளாச்சி: கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து வால்பாறை இன்று விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.



வால்பாறையில் பாரதியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை பொள்ளாச்சி கோட்ட கலால் அலுவலர் சியாமளா தலைமையேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். 



இதில் கல்லூரி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, “ஒழிப்போம் ஒழிப்போம் கள்ளச்சாராயத்தை ஒழிப்போம்”, “கள்ளச்சாராயம் குடித்தால் கண்பார்வை போய்விடும்” “கள்ளச்சாராயம் உயிருக்கு கேடு” “கள்ளச்சாராயம் குடித்தால் மலட்டுத்தன்மை” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைளுடன் கோஷமிட்டு வால்பாறை பாரதியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு வால்பாறை முக்கிய வீதிகளின் வழியாக தபால் நிலையம் சென்றடைந்தனர். தொடர்ந்து, அங்கிருந்து பேரணியாக வாழைத்தோட்டம் வழியாக கல்லூரி வளாகம் வந்தடைந்தனர். 

இந்த பேரணியில் வால்பாறை வட்டாட்சியர் குணசேகரன், கல்லூரி துணை முதல்வர் குணசுந்தரி, வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...