கோவை அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் அரசு முதன்மைச் செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஹர்மந்தர்சிங் தலைமையில் நடைபெற்றது.

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் அரசு முதன்மைச் செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஹர்மந்தர்சிங் தலைமையில் நடைபெற்றது.



 

இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் அரசு முதன்மை செயலாளர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்ததாவது :- கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரத்தை பேணும் வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து, தண்ணீர், தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ளுதல், குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அலுவலர்கள் பணி மேற்கொள்ள வேண்டும். தெருக்களில் உள்ள குப்பைத்தொட்டிகள் பழுதடைந்து இருந்தால் புதிதாக மாற்றி தெருக்களில் குப்பைகள் சேராமல் உடனுக்குடன் அப்புறப்படுத்தவேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தாங்கள் சார்ந்த பகுதிகளுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த அலுவலர்கள் மூலம் அறிவுறுத்த வேண்டும். மேலும், கோவை மாவட்டத்தில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால் கோடை காலத்திலும் கூட ஊரக மற்றும் மாநகர பகுதிகளில் போதிய அளவில் குடிநீர் வழங்க இயலும்.

நெடுஞ்சாலைத்துறையின் மூலம், முடியும் தருவாயில் உள்ள சாலைப்பணிகள் விரைந்து முடிக்க வேண்டும். மேலும், நெடுஞ்சாலைகளில் குறைவாக உள்ள குப்பைத்தொட்டிகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படவேண்டும், மேலும், தற்பொழுது நிலுவையில் உள்ள திட்டப்பணிகளை விரைந்து முடித்து, அதன் தற்போதைய நிலைகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாயிலாக உடனடியாக அறிக்கை தெரிவிக்க வேண்டும். அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு நேரடியாக எந்த வித சிரமமும் இன்றி உரிய நேரத்தில் சென்றடைய அனைத்துத்துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டும். இவ்வாறு கூறினார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...