மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் சார்பாக மாநகராட்சி ஆணையாளரிடம் மனு

ஆசிரியர் பணி நியமனத்தில் விதிமீறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டி கோவை மாநகராட்சி அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தினர் மாநகராட்சி ஆணையாளரிடம் இன்று மனு அளித்தனர்.

கோவை : ஆசிரியர் பணி நியமனத்தில் விதிமீறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டி கோவை மாநகராட்சி அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தினர் மாநகராட்சி ஆணையாளரிடம் இன்று மனு அளித்தனர்.



முன்னதாக, இது குறித்து கோவை மாநகராட்சி அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தின் கொள்கை விளக்க செயலாளர் ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'கல்வி அலுவலரின் தவறான செயல்பாடுகளால் ஆசிரியர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளோம். சென்ற ஆண்டு தமிழக அரசால் கோவைக்கு வழங்கப்பட்ட 11 புதிய முதுகலை பணியிடங்கள் இன்று வரை நிரப்பப்படவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக கோவை மாநகராட்சியில் இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள் TRB/TET தேர்வுகள் மூலம் நியமிக்கப்படாமல், அரசு விதிகளை மீறி, பணி மாறுதல் மூலம் மட்டுமே நியக்கமிக்கப்பட்டு வருகின்றனர். 

மேலும், அரசு விதிகளுக்கு புறம்பாக ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது, ஏழு ஆண்டுகளாக மாநகராட்சி பள்ளிகளின் தரம் உயர்த்தப்படுவதற்கு எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் இருப்பது போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் கல்வி அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும்' என்றார்.

கல்வி அதிகாரிகளிடம் மனு அளிப்பதற்கு முன்பு, மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் கூட்டம் நடைபெற்றது. சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...