உதகையில் 122-வது மலர்கண்காட்சி வரும் மே 18-ம் தேதி தொடக்கம்

உதகையில் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மலர் கண்காட்சி வரும் மே 18-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என தோட்டக்கலைத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.

உதகை : உதகையில் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மலர் கண்காட்சி வரும் மே 18-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என தோட்டக்கலைத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.  



மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இச்சமயங்களில் வெளிநாட்டு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் லட்சக்கணக்கில் உதகைக்கு வருவது வழக்கம். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளைக் கவர தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பழக் கண்காட்சி உட்பட பல்வேறு கோடை விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். 

இந்நிலையில் இந்தாண்டுக்கான கோடை விழாக்கள் குறித்து இன்று உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலைத்துறை இயக்குநர் சுப்பையன் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் வரும் மே மாதம் 18,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் 122-வது மலர் கண்காட்சியும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே 26 மற்றும் 27-ம் தேதி 60-வது பழக்கண்காட்சியும் நடக்கிறது. இதேபோல, ரோஜா பூங்காவில் 12,13 ஆகிய தேதிகளில் 16-வது ரோஜா கண்காட்சியும், கோத்தகிரி நேரு பூங்காவில் மே 5,6 ஆகிய தேதிகளில் 10-வது காய்கறி கண்காட்சியும், கூடலூரில் 8-வது வாசனை திராவிய கண்காட்சி மே 11,12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும். இவ்வாறு கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உடனிருந்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...