வேளாண் பல்கலையில் 2 நாள் சர்வதேச விரிவாக்க மாநாடு இன்று தொடக்கம்

கோவையில் உள்ள தமிழக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாநாட்டை பல்கலைக்கழக துணைவேந்தர் கு. இராமசாமி இன்று துவக்கி வைத்தார்.

கோவை : கோவையில் உள்ள தமிழக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாநாட்டை பல்கலைக்கழக துணைவேந்தர் கு. இராமசாமி இன்று துவக்கி வைத்தார். 



இவ்விழாவில் சென்னை நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் எஸ்.என்.ஏ. ஜின்னா, மத்திய திட்டக்குழுவின் முன்னாள் வேளாண் ஆலோசகர்  வி.வி. சதாமத்தே ஆகியோரும் இந்தத் துவக்க விழாவில் பங்கேற்றனர். இம்மாநாட்டில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விரிவாக்க விஞ்ஞானிகள், அதிகாரிகள், ஆராய்ச்சி மாணவர்கள் சுமார் 300 பேர் கலந்து கொண்டுள்ளனர். பல்கலைக்கழக துணைவேந்தர் கு. இராமசாமி தனது துவக்க உரையில், குறைந்துவரும் சாகுபடி பரப்பு, வேலையாட்கள் பற்றாக்குறை மற்றும் நீர் பாசனப் பற்றாக்குறை ஆகிய பிரச்சனைகளுக்கிடையே உணவு உற்பத்தியை உயர்த்திய பெருமையில் வேளாண் விரிவாக்க விஞ்ஞானிகள் வேளாண் விரிவாக்க அலுவலர்களின் பங்களிப்பை பாராட்டிப் பேசினார்.

மேலும், நமது வேளாண் விரிவாக்க அணுகுமுறைகள் அரசு மற்றும் தனியார் அமைப்புகளை ஒருங்கிணைந்து செயல்படும் வகையிலும், தேசிய மற்றும் உள்ளூர் சந்தைகளை ஒருங்கிணைக்கும் வகையிலும் செயல்பட வேண்டும் என்றும், விவசாயிகள் கடன் பெறுவது மற்றும் உபயோகித்தல் ஆகியவற்றை ஆய்வு செய்வதன் அவசியத்தைப் பற்றியும் குறிப்பிட்டார். வறட்சிக்கு இலக்காகும் பகுதிகளில் அந்தந்தப் பகுதிகளுக்கேற்ற மாற்றுப் பயிர்கள் பற்றிய பரிந்துரைகளை பொதுவாகக் குறிப்பிடாமல் துல்லிய பரிந்துரைகளாக வழங்கமாறு கேட்டுக்கொண்டார்.

அடுத்தாகப் பேசிய சென்னை நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் எஸ்.என்.ஏ. ஜின்னா, நமது வேளாண் விhpவாக்க அணுகுமுறைகள் தற்போது பெரிய மாற்றங்களைச் சந்தித்து வருவதாக எடுத்துரைத்தார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...