ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கு : கார்த்தி சிதம்பரத்திற்கு மேலும் 3 நாள் காவல்

ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தின் நீதிமன்ற காவல், மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தின் நீதிமன்ற காவல், மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஐ.என்.எக்ஸ்., மீடியா என்ற நிறுவனம் விதிமுறைகளை மீறி அதிக அளவில் அன்னிய முதலீட்டை பெற்றதாக சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். அப்போதைய, மத்திய நிதியமைச்சரின் சிதம்பரத்தின் மகன் கார்த்தி, நிதியமைச்சக அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, இந்த முறைகேட்டிற்கு உதவியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. 

இது தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதியன்று கார்த்தி சிதம்பரத்தை சென்னை விமான நிலையத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்து டெல்லி அழைத்து சென்றனர். அங்கு நீதிமன்ற உத்தரவுப்படி, அவரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்த சி.பி.ஐ., அதிகாரிகள், தொடர்ந்து, மேலும் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இந்த சி.பி.ஐ., காவல் முடிந்த நிலையில் டெல்லி நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரத்தை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது, விசாரணை முடிவடையாத காரணத்தினால், கார்த்தியை மேலும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என சி.பி.ஐ., அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து, கார்த்தி சிதம்பரத்தை மேலும் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. விசாரணை முடிந்த பின்னர் வரும் திங்கட்கிழமை (மார்ச் 12) பிற்பகல் 12 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டனர். 

ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை, வரும் 20-ம் தேதி வரை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்ற தடை விதித்துள்ளது. இது தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கும், அமலாக்கத்துறைக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...