தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு : பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடிய தொண்டர்கள்

அ.தி.மு.க. அம்மா அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் பட்டாசுளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.

திருப்பூர்: அ.தி.மு.க. அம்மா அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் பட்டாசுளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். 



அ.தி.மு.க. அம்மா அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை, திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அம்மா அணியின் சார்பில், பார்க் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். முழு உருவசிலைக்கு மாவட்ட கழக செயலாளர் சி. சிவசாமி தலைமையில் ஏராளமான கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், கழக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர். 

இதேபோல, பல்லடம், அவிநாசி, அன்னூர் உட்பட பல்வேறு பகுதிகளில் கழக தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடினார்கள். இந்த உற்சாகமான கொண்டாட்டத்தில் மாவட்ட கழக இணை செயலாளர் ஜோதிமணி, மாவட்ட பாசறை செயலாளர் சதீஷ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் டி. பார்த்திபன், களஞ்சியம் பொன்னுசாமி, சூர்யா, செந்தில் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...