அரசின் சார்பில் உண்டு, உறைவிடப் பள்ளி மாணவர்களுக்கு ஒருநாள் விழிப்புணர்வு சுற்றுலா

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் பின்தங்கிய பழங்குடியினருக்கான உண்டு, உறைவிடப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா இன்று உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தொடங்கியது.

நீலகிரி: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் பின்தங்கிய பழங்குடியினருக்கான உண்டு, உறைவிடப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா இன்று உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தொடங்கியது. 



நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்த இந்த சுற்றுலா பயணத்தில் கரிக்கையூர், குஞ்சப்பண்ணை, புத்தூர் வயல், பொண்ணூர், நடுவட்டம், கார்குடி உண்டு உறைவிட பள்ளிகளில் படிக்கும் 150 மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர். பின்தங்கிய பகுதிகளில் வாழும் இந்த மாணவர்களுக்கு இயற்கையைப் பாதுகாப்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது, சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைப்பது மற்றும் கழிவறைகளை பயன்படுத்துவது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.

இந்த ஒருநாள் சுற்றுலாவின் போது உதகையிலுள்ள அருங்காட்சியகம், ஆளுநர் மாளிகை, தாவரவியல் பூங்கா, பழமை வாய்ந்த கட்டிடங்கள் மற்றும் வானியல் ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிட உள்ளனர். இதுபோன்ற திட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்படுவதாகவும், நீலகிரி மாவட்டத்திற்காக ரூ. 2 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் முரளி தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...