செய்தி எதிரொலி: முடங்கிப் போன தாய்-சேய் ஊர்தி சேவை மீண்டும் உயிர் பெற்றது

பொள்ளாச்சியில் முடங்கிப்போன தாய்-சேய் ஊர்தி சேவை மீண்டும் உயிர் பெற்று இயங்கத் தொடங்கியது.

கோவை: பொள்ளாச்சியில் முடங்கிப்போன தாய்-சேய் ஊர்தி சேவை மீண்டும் உயிர் பெற்று இயங்கத் தொடங்கியது. 

பொள்ளாச்சியில் தாய்-சேய் சிகிச்சைக்காக 24 மணி நேரமும் செயல்பட்டு வந்த 102 ஆம்புலன்ஸ் கடந்த சில நாட்களாக செயல்படாமல் இருந்தது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர பெண்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

இது தொடர்பாக "பொள்ளாச்சியில் செயல்படாத 102 ஆம்புலன்ஸ்" சேவை என்ற தலைப்பில் கடந்த 3-ம் தேதி சிம்ப்ளிசிட்டியில் செய்தி வெளியிடப்பட்டது.

இது தமிழ்நாடு அரசின் இலவச தாய்-சேய் சேவை மையத்தின் தொடர்பு அலுவலரிடம் பேசினோம். அவர், "பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் 102 வண்டி பழுதடைந்து உள்ளது. ஓட்டுநர் பற்றாக்குறை காரணமாக தற்போது இந்த சேவை முடங்கிப் போயுள்ளது." என்று முரண்பட்ட கருத்துக்களை கூறினார்.

பின்னர், திட்ட இயக்குநர் ரூபனை தொடர்பு கொண்ட போது, " உடனடியாக மாற்று சேவை வாகனம் அமைத்து மக்களின் தேவையை பூர்த்தி செய்கிறோம்." என்றார். அதேபோல் செய்தி வெளியிட்டு ஓரிரு நாளில் 102 வண்டி செயல்பட தொடங்கியது.



இது குறித்து பொள்ளாச்சியைச் சேர்ந்த பிரபாகரன் கூறுகையில், " 102 வாகனம் ஏழை, எளிய தாய்மார்களின் தேவையைப் பூர்த்தி செய்கிறது. பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள கிராமப்புற தாய்மார்கள் இந்த சேவையை மகிழ்வுடன் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவை ஒரு நாள் செயல்படவில்லை என்றாலும் தாய்மார்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவார்கள். எங்களின் கோரிக்கையை ஏற்று விரைவாக தாய்-சேய் சேவை ஊர்தி சேவையாற்ற தயாரானது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது." என்றார்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...