தமிழகம் முழுவதும் போராட்டம் தொடரும்: மாணவர்கள் எச்சரிக்கை

திரிபுராவில் லெனின் சிலை இடிக்கப்பட்டதைக் கண்டித்தும், தமிழகத்தில் பெரியார் சிலை இடிக்கப்படும், என்ற பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜாவைக் கண்டித்தும் தஞ்சையில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்: திரிபுராவில் லெனின் சிலை இடிக்கப்பட்டதைக் கண்டித்தும், தமிழகத்தில் பெரியார் சிலை இடிக்கப்படும், என்ற பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவைக் கண்டித்தும் தஞ்சையில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்த கையேடு அம்மாநிலத்தில் இருந்த லெனின் சிலை இடித்து அகற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜாவை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு தமிழகம் முழுவது எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அந்த பதிவை நீக்கினார். 

இந்த நிலையில் பா.ஜ.க. அரசின் இந்தப் போக்கை கண்டித்து தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரியை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஊர்வலமாகச் சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கண்டனங்களை தெரிவித்தனர்.



காவல்துறை அனுமதியை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் எச்.ராஜாவை கைது செய்யாவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் தொடரும் என்று எச்சரித்தனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...