பல்லடத்தில் 700 ஆண்டுகள் பழமையான கோவிலின் மேற்கூரை இடிந்து விபத்து

பல்லடம் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த ஈஸ்வரன் கோவிலின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

திருப்பூர்: பல்லடம் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த ஈஸ்வரன் கோவிலின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்டது அல்லாளபுரம். இங்கு ஸ்ரீ உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. பாண்டியர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. 700 ஆண்டுகள் மிகவும் பழமையான இக்கோவில் தற்போது அறநிலையத்துறை வசம் உள்ளது.



1995-ல் கும்பாபிசேகம் நடத்தப்பட்ட இக்கோவிலில் அதற்கு பிறகு எந்த விதமான விழாக்களும் நடைபெறவில்லை என இப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், நீண்ட நாட்களாக பராமரிப்பில் இல்லாத கோவிலின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததது. பக்தர்கள் குறைவான அளவே இருந்த காரணத்தினால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. நீண்ட நாட்களாக மாவட்ட நிர்வாகத்திடமும், இந்து சமய அறநிலைய அதிகாரிகளிடம் இது குறித்து பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



கோவிலுக்குச் சொந்தமாக 450 ஏக்கர் நிலம் உள்ளதாகவும் அதனை மீட்டுத்தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...