வழிதவறி ஊருக்குள் புகுந்த புள்ளிமானை பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

கோவை மாவட்டம் மருதமலை அருகே வழிதவறி குடியிருப்பு பகுதிகளுக்கு சுற்றித் திரிந்த புள்ளி மானை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட்டனர்.

கோவை : கோவை மாவட்டம் மருதமலை அருகே வழிதவறி குடியிருப்பு பகுதிகளுக்கு சுற்றித் திரிந்த புள்ளி மானை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட்டனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான மருதமலை வனப்பகுதிக்குள் இருந்து மூன்று நாட்களுக்கு முன்பு 3 வயது மதிக்கத்தக்க புள்ளிமான்  கல்லீரம்பாளையம், ஐ.ஓ.பி. காலனி, பொம்மணம்பாளையம் உள்ளிட்ட பகுதியில் சுற்றி திரிவதாக வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து, மூன்று நாட்களாக தேடப்பட்ட மான் இன்று காலை மருதமலை முருகன் நகர் குடியிருப்பு பகுதி அருகே ஒரு புதரில் இருப்பதாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு மீண்டும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வன அதிகாரிகள், புள்ளிமானை பத்திரமாக மீட்டு, பாரதியார் பல்கலைக்கழகத்தின் வனப்பகுதி ஒட்டிய பின் பகுதியில் உள்ள நூறு நாள் குட்டை பகுதியில் விட்டனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...