நீலகிரியில் மீன் வலையில் சிக்கிய பாம்பு உயிருடன் மீட்பு

உதகை அருகே விவசாய நிலத்தில் வேலிக்காக அமைக்கப்பட்டிருந்த மீன் வலையில் சிக்கிய பாம்பு வனத்துறையினரால் உயிருடன் மீட்கப்பட்டது.

நீலகிரி : உதகை அருகே விவசாய நிலத்தில் வேலிக்காக அமைக்கப்பட்டிருந்த மீன் வலையில் சிக்கிய பாம்பு வனத்துறையினரால் உயிருடன் மீட்கப்பட்டது. 



நீலகிரி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு மலை காய்கறிகளான கேரட், பிட்ரூட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. இப்படி பயிரிடப்படும் காய்கறிகளை அடிக்கடி வனவிலங்குகள் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பயிர்களை வன விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள விவசாய நிலங்களில் முள் வேலிகள் மற்றும் மின் வேலிகள் மற்றும் மீன் வலைகளை விவசாயிகள் அமைத்து வருகின்றனர்.

இந்நிலையில், உதகை அருகேயுள்ள அத்திக்கள் என்னும் கிராமத்தில் ஒரு குடியிருப்பு அருகே சாரை பாம்பு ஒன்று மீன் வலையில் சிக்கியுள்ளதாக வன பாதுகாவலருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற வன பாதுகாவலர் சாதிக் மீன் வலையில் சிக்கியிருந்த பாம்பை உயிருடன் மீட்டார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், "சிறு வன விலங்குகளிடமிருந்து விவசாய நிலங்களைப் பாதுகாக்க இதை போன்ற மீன் வலைகளை விவசாயிகள் அமைத்து வருகின்றனர். இதில் சிக்கி சிறு வன விலங்குகள் இறக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, விவசாயிகள் இதைப் போன்று மீன் வலைகளை வேலிகளில் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்." என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...