வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு

திருப்பூர் மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலை அதிகரித்துள்ளது.

திருப்பூர் : திருப்பூர் மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலை அதிகரித்துள்ளது.

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு திருப்பூர் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் பல்லடம், தாராபுரம், பொங்கலூர் ஆகிய இடங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. விளைச்சல் அதிகரித்துள்ளதால் கடந்த சில நாட்களாக சுமார் 20 டன் தக்காளி விற்பனைக்கு வந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.70-க்கு விற்கப்பட்டது. ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை ரூ.5 வரை இருந்தது. சில்லரைக்கு கிலோ ரூ.8-க்கு விற்கப்பட்டது.



இந்நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து குறைந்து சுமார் 8 டன் தக்காளி மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. இதனால், ஒரு பெட்டி தக்காளி ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை ரூ.6 ஆக இருந்ததால் மளிகை கடை, தள்ளுவண்டிகளில் ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இது குறித்து விவசாயிகள் கூறும் போது, "நன்கு பழுத்து கனிந்த பழங்களை பறிக்காமல் செடியிலேயே விட்டு விட்டு, நல்ல தரமான கெட்டியான நிலையில் உள்ள தக்காளியை மட்டுமே பறித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். இதனால் வரத்து குறைந்துள்ளது. விலையும் உயர்ந்துள்ளது." என்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...