சேலம் ரயில் நிலையம் அனைத்து மகளிர் ரயில் நிலையமாக மாற்றப்படும் - சேலம் ரயில்வே கோட்ட மேலாளர்

கோவை : சேலம் டவுன் ரயில் நிலையம் சேலம் கோட்டத்தின் முதல் அனைத்து மகளிர் ரயில் நிலையமாக மாற்றப்படும் என்று சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா தெரிவித்துள்ளார். 



சேலம் கோட்ட தலைமை அலுவலகத்தில் உலக இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. தெற்கு ரயில்வே உள்ள பன்னோக்குக் கருத்தரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா தலைமை விருந்தினராக பங்கேற்றார்.  



விழாவில் அவர் பேசுகையில், "சேலம் கோட்ட நிர்வாகம் பெண் ஊழியர்களுக்காக பல்வேறு வசதிகளையும் மேம்பாடுகளையும் செய்து வருகிறது. எப்பொழுதும் எந்த ஒரு பெண் ஊழியர் விடுமுறை கோரி விண்ணப்பித்தாலும் எந்த ஒரு தடையும், மறுப்பும் இன்றி அவர்களுக்கு விடுப்பு வழங்கப்படுகிறது.



மேலும், சேலம் கோட்டத்தில் உள்ள சேலம் டவுன் ரயில்நிலையம் இக்கோட்டத்தின் முதல் அனைத்து மகளிர் ரயில் நிலையமாக மாற்றப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலம் கோட்டத்தில் உள்ள ரயில்வே பள்ளிகளில் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியை, ஆசிரியைகள் மற்றும் இதர ஊழியர்கள் உள்பட அனைத்து  உறுப்பினர்களும்  பெண்களாக கொண்ட அனைத்து மகளிர் கல்விக் கூடமாக மாற்றப்பட உள்ளது." என்றார்.

இவ்விழாவில், சேலம் கோட்ட முதுநிலை நிதி மேலாளர் உமா மகேஸ்வரி, சேலம் கோட்ட  பணியாளர் நல அலுவலர் எஸ். திருமுருகன், சேலம் தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் கோட் செயலாளர் எம்.கோவிந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...