பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு : மேலும் ஒருவர் சரண்

கோவை பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் இருவர் சரணடைந்த நிலையில் மேலும் ஒரு நபர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

கோவை: கோவை பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் இருவர் சரணடைந்த நிலையில் மேலும் ஒரு நபர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகம் மீது இன்று அதிகாலை சில நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டுத் தப்பியோடினர். இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சி அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். 

இந்த சம்பவம் தொடர்பாக, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த பாலன் மற்றும் ஜீவானந்தம் ஆகியோர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இந்த நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய கவுதம் என்ற தந்தை பெரியார் திராவிடர் கழக உறுப்பினர் சாயிபாபாகாலனி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக, சரணடைந்தவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...