கோவையில் வெயில் 'சக்கைப் போடு-போட' துவங்கிவிட்டது. மதிய நேரங்களில் வெளியில் செல்ல பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த கோடை வெயிலின் தாகத்தை தணிக்க மக்கள் குளிர்ச்சி மிகுந்த தண்ணீரை விரும்பி அருந்துகின்றனர்.
கோவை: கோவையில் வெயில் 'சக்கைப் போடு-போட' துவங்கிவிட்டது. மதிய நேரங்களில் வெளியில் செல்ல பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த கோடை வெயிலின் தாகத்தை தணிக்க மக்கள் குளிர்ச்சி மிகுந்த தண்ணீரை விரும்பி அருந்துகின்றனர்.
இதன் காரணமாக, மின்சார செலவே இல்லாமல் நீரை குளிர்விக்கும் மண்பானையைத் தேடி மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால், கோவையில் மண்பானை விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
கவுண்டபாளையம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மண்பாண்ட விற்பனை மையங்கள் உள்ளன. இங்கு செம்மண், களிமண், வண்டல் மண் போன்ற மண்களால் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகைகளில் மண்பாண்டங்கள் விற்பனைக்கு உள்ளன.

ஐந்து வகை அளவில் இந்த மண்பானைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இதன் விலை ரூ.40 முதல் ரூ.150 வரை உள்ளது. கடந்த வருடத்தை விட இந்தாண்டு விலை சற்று உயர்வாக காணப்பட்டாலும் பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி செல்வதாக மண்பானை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மண்பானை விற்பனையாளர் செல்வராஜ் கூறுகையில், "மண் கிடைப்பதில் தட்டுப்பாடு காரணமாக தற்போது மண்பானை விலை சற்று உயர்வாக காணப்படுகிறது. எனினும் மக்கள் எங்களை புரிந்துகொண்டு வாங்கிச் செல்கின்றனர். மக்களிடையே இயற்கை முறைகள் குறித்த விழிப்புணர்வு அதிக அளவு ஏற்பட்டுவிட்ட காரணத்தினால் மண்பானைகள் விற்பனை அதிகரித்துள்ளது." என்றார்.
இது குறித்து வாடிக்கையாளர் முருகன் கூறுகையில், "கடந்த மூன்று வருடங்களாக மண்பானைகளை உபயோகித்து வருகின்றேன். வருடம் ஒரு முறை பழைய மண்பானைகளை மாற்றி புதிய மண்பானைகளை வாங்கிவிடுவேன். இதில் தண்ணீர் குடிப்பதால் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. மேலும் இதில் சமைத்து சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. தற்போது வெயில் காலம் தொடங்க ஆரம்பித்துவிட்டதால் முன்னரே மண்பானைகளை வாங்கி வைத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டேன்." என்றார்.
மண்பானைகள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் கட்டுவதால் அதன் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதன் காரணமாக, மின்சார செலவே இல்லாமல் நீரை குளிர்விக்கும் மண்பானையைத் தேடி மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால், கோவையில் மண்பானை விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
கவுண்டபாளையம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மண்பாண்ட விற்பனை மையங்கள் உள்ளன. இங்கு செம்மண், களிமண், வண்டல் மண் போன்ற மண்களால் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகைகளில் மண்பாண்டங்கள் விற்பனைக்கு உள்ளன.

ஐந்து வகை அளவில் இந்த மண்பானைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இதன் விலை ரூ.40 முதல் ரூ.150 வரை உள்ளது. கடந்த வருடத்தை விட இந்தாண்டு விலை சற்று உயர்வாக காணப்பட்டாலும் பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி செல்வதாக மண்பானை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மண்பானை விற்பனையாளர் செல்வராஜ் கூறுகையில், "மண் கிடைப்பதில் தட்டுப்பாடு காரணமாக தற்போது மண்பானை விலை சற்று உயர்வாக காணப்படுகிறது. எனினும் மக்கள் எங்களை புரிந்துகொண்டு வாங்கிச் செல்கின்றனர். மக்களிடையே இயற்கை முறைகள் குறித்த விழிப்புணர்வு அதிக அளவு ஏற்பட்டுவிட்ட காரணத்தினால் மண்பானைகள் விற்பனை அதிகரித்துள்ளது." என்றார்.
இது குறித்து வாடிக்கையாளர் முருகன் கூறுகையில், "கடந்த மூன்று வருடங்களாக மண்பானைகளை உபயோகித்து வருகின்றேன். வருடம் ஒரு முறை பழைய மண்பானைகளை மாற்றி புதிய மண்பானைகளை வாங்கிவிடுவேன். இதில் தண்ணீர் குடிப்பதால் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. மேலும் இதில் சமைத்து சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. தற்போது வெயில் காலம் தொடங்க ஆரம்பித்துவிட்டதால் முன்னரே மண்பானைகளை வாங்கி வைத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டேன்." என்றார்.
மண்பானைகள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் கட்டுவதால் அதன் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.