நீலகிரியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அதிரடி ஆய்வு

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறி.வாகனங்கள் இயக்கப்படுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் நேற்று அதிரடி ஆய்வினை மேற்கொண்டார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறி.வாகனங்கள் இயக்கப்படுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் நேற்று அதிரடி ஆய்வினை மேற்கொண்டார்.

மலை மாவட்டமான நீலகிரியில் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்ந்து மீறப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, மாவட்டத்தில் அதிரடி சோதனை நடத்திட போக்குவரத்து அலுவலர் லட்சுமிபதிராஜ் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் நேற்று போக்குவரத்து ஆய்வாளர் சக்திகுமார் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது போக்குவரத்து விதிகளை மதிக்காமல் அதிகளவு வாகனங்கள் இயக்கப்படுவது தெரியவந்தது. இதையடுத்து சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றிவந்த ஜீப், பயணிகளை ஏற்றிச் செல்லும் கார், உணவு பொருட்கள் ஏற்றிச் செல்லும் ஜீப் மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாத மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் நிறுத்தப்பட்டு அந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஆய்வின் போது போக்குவரத்து ஆய்வாளர் சக்திகுமார் கூறுகையில், "18 வயதுக்கு உட்பட்டோர் கண்டிப்பாக வாகனங்களை இயக்கக் கூடாது. இது சட்டத்தை மீறிய செயலாகும் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் வாகனத்தை இயக்கும் போது தான் பெரும்பாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே அனைவரும் கண்டிப்பாக போக்குவரத்து விதிகளைக் கடைபிடித்து பாதுகாப்பான பயணம் செய்ய வேண்டும்." என்றார்.

இந்த சோதனையின் போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கிய பல்வேறு வாகன ஓட்டுநர்களுக்கு மொத்தம் ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...