நான் எந்த பதிவும் போடவில்லை: அந்தர்பல்டி அடிக்கும் எச்.ராஜா

"பேஸ்புக் பக்கத்தில் பெரியார் சிலை குறித்த கருத்தை நான் பதிவு செய்யவில்லை" என்று எச்.ராஜா அந்தர்பல்டி அடித்துள்ளார்.

கோவை: "பேஸ்புக் பக்கத்தில் பெரியார் சிலை குறித்த கருத்தை நான் பதிவு செய்யவில்லை" என்று எச்.ராஜா அந்தர்பல்டி அடித்துள்ளார். 

திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதைப் போல் தமிழகத்தில் இருந்து பெரியார் சிலை அகற்றப்படும் என்று பா.ஜ.க.தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். 

இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனக் குரல்கள் எழுந்தது. 

அரசியல் கட்சி தலைவர்கள் எச்.ராஜா-வுக்கு பகிரங்க மிரட்டல்கள் விடுத்த நிலையில் நேற்று நள்ளிரவு திருப்பத்தூரில் பெரியார் சிலையை பா.ஜ.க. பிரமுகர்கள் சேதப்படுத்தினர். 

இதனால் தமிழகம் முழுவதும் பதற்றமான சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து, பெரியார் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

பெரியார் சிலை தாக்கப்பட்ட விவகாரத்திற்கு எதிராக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் மீது இன்று அதிகாலை சில மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர். 

இந்த பதட்டமான சூழ்நிலைக்குக் காரணமான எச்.ராஜா, பெரியார் சிலை தொடர்பாக தான் பேஸ்புக் பக்கத்தில் எந்த கருத்தும் பதிவிடவில்லை என்று அந்தர்பல்டி அடித்துள்ளார். 

இது தொடர்பாக அவரது பேஸ்புக் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது :- 

நேற்றைய தினம் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் ஈவெரா அர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்ற பதிவு முகநூல் Admin என் அனுமதி இன்றி பதித்துள்ளார். எனவே தான் அதை நான் பதிவு நீக்கம் செய்திருந்தேன். 

கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள வேண்டுமே அன்றி வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. எனவே இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதய பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் ஈ.வெ.ரா அவர்கள் சிலைகளை சேதப் படுத்துவது போன்ற செயல்கள் நமக்கு ஏற்புடையதல்ல. 

ஆகவே ஆக்கப்பூர்வமாக, அமைதியான முறையில் நாம் இந்து உணர்வாளர்களை இணைத்து தமிழகத்தில் தேசியம், தெய்வீகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரமிது.

இவ்வாறு தனது பேஸ்புக் பக்கத்தில் எச்.ராஜா கூறியுள்ளார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...