மேட்டுப்பாளையம் அருகே சாலை விபத்தில் ஊராட்சி செயலர் பலி

மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையில் இரண்டு சக்கர வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் பிளிச்சி ஊராட்சி செயலர் ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையில் இரண்டு சக்கர வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் பிளிச்சி ஊராட்சி செயலர் ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.



வீரபாண்டி பிரிவைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் (42). பிளிச்சி பகுதியின் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பெண் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆனந்தகுமார் நேற்று பவானிசாகர் ஊராட்சி நிர்வாகம் சம்பந்தமான அரசு அலுவலர் பயிற்சி மையத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்துகொள்ள தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுமுகை சக்தி சாலையில் பெத்திக்குட்டை அருகே சென்ற போது நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக தகவலறிந்த சிறுமுகை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ஆனந்தகுமார் அவரது கண்களை தானம் செய்துள்ளார். கோவை அரவிந்த் மருத்துவக்குழு அவரது கண்களை எடுத்துச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...