சிரியா தாக்குதலை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சிரியாவில் நடைபெற்று வரும் மனிதப் படுகொலைகளை கண்டித்து திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திருப்பூர் : சிரியாவில் நடைபெற்று வரும் மனிதப் படுகொலைகளை கண்டித்து திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 



திருப்பூர் - காங்கயம் சாலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சிரியாவில் நடைபெற்று வரும் மனித படுகொலைகளை கண்டித்து மாவட்ட தலைவர் ஹைதர் அலி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிரியாவில் இருந்து ரஷ்ய ராணுவம் வெளியேற வேண்டும் என்றும், ஐ.நா. சபை இந்த மனித உரிமை மீறல் விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிரியா விவகாரத்தில் இந்திய அரசு அமைதி காப்பதை தவிர்த்துவிட்டு சிரியா மக்களின் பாதுகாப்பிற்க்காக குரல் கொடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனைத் தொடர்ந்து சிரியா அதிபரின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். உடனடியாக அங்கு இருந்த போலீசார் உருவ பொம்மையை அப்புறப்படுத்த முயன்ற போது, இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உருவபொம்மையை பறித்த போலீசார் ஓடும் பேருந்தில் ஏறி தப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சிரியா அதிபரின் உருவப்படத்தை எரித்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...