ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தலா...? ஆதாரங்களை வைத்து அச்சுறுத்தும் பீட்டா

இந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டின் போது காளைகள் துன்புறுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை திரட்டி, ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் முறையிட பீட்டா அமைப்பு முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டின் போது காளைகள் துன்புறுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை திரட்டி, ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் முறையிட பீட்டா அமைப்பு முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பீட்டா விதிக்கப்பட்ட தடையால் கடந்த சில ஆண்டுகள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில், தமிழர்களின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பொருட்டு, இளைஞர்களின் ஆர்ப்பாட்டம், அதனால் இயற்றப்பட்ட அவசரச் சட்டங்களால் ஜல்லிக்கட்டு மீண்டும் தமிழகத்தில் தலைதூக்கியது. இதனால், பல்வேறு தடைகளுக்கு பிறகு தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு சீறும், சிறப்புமாக நடைபெற்று வருகிறது. பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் முதல் குக்கிராமங்கள் வரையிலும் ஜல்லிக்கட்டுப் போட்டி களைகட்டியது. இருப்பினும், பீட்டா அமைப்பினர், தமிழகத்தில் நடைபெற்ற அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் கலந்து கொண்டு காளைகள் துன்புறுத்தப்படுகின்றனவா..? என்ற ஆதாரங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டது. 

இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 14-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 9 இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில், காளைகள் துன்புறுத்தப்படுவதற்கான ஆதாரங்களை பீட்டா திரட்டியுள்ளது. இதுவரை காளைகள் துன்புறுத்தப்படும் வீடியோக்கள் அடங்கிய 131 பக்கங்கள் கொண்ட ஆதாரங்களை பீட்டா வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஆதாரங்கள் அனைத்தையும், உச்சநீதிமன்றத்தில் சமர்பித்து, மீண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடைபெறப் போவதாக பீட்டா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பீட்டாவின் இந்த நடவடிக்கை தமிழர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...