இந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டின் போது காளைகள் துன்புறுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை திரட்டி, ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் முறையிட பீட்டா அமைப்பு முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டின் போது காளைகள் துன்புறுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை திரட்டி, ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் முறையிட பீட்டா அமைப்பு முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
பீட்டா விதிக்கப்பட்ட தடையால் கடந்த சில ஆண்டுகள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில், தமிழர்களின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பொருட்டு, இளைஞர்களின் ஆர்ப்பாட்டம், அதனால் இயற்றப்பட்ட அவசரச் சட்டங்களால் ஜல்லிக்கட்டு மீண்டும் தமிழகத்தில் தலைதூக்கியது. இதனால், பல்வேறு தடைகளுக்கு பிறகு தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு சீறும், சிறப்புமாக நடைபெற்று வருகிறது. பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் முதல் குக்கிராமங்கள் வரையிலும் ஜல்லிக்கட்டுப் போட்டி களைகட்டியது. இருப்பினும், பீட்டா அமைப்பினர், தமிழகத்தில் நடைபெற்ற அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் கலந்து கொண்டு காளைகள் துன்புறுத்தப்படுகின்றனவா..? என்ற ஆதாரங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டது.
இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 14-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 9 இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில், காளைகள் துன்புறுத்தப்படுவதற்கான ஆதாரங்களை பீட்டா திரட்டியுள்ளது. இதுவரை காளைகள் துன்புறுத்தப்படும் வீடியோக்கள் அடங்கிய 131 பக்கங்கள் கொண்ட ஆதாரங்களை பீட்டா வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஆதாரங்கள் அனைத்தையும், உச்சநீதிமன்றத்தில் சமர்பித்து, மீண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடைபெறப் போவதாக பீட்டா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பீட்டாவின் இந்த நடவடிக்கை தமிழர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.