மின்வாரியத் துறையில் ஒப்பந்த முறையில் பணி செய்யும் ஊழியர்களை பணிநிரந்தர செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோவை : மின்வாரியத் துறையில் ஒப்பந்த முறையில் பணி செய்யும் ஊழியர்களை பணிநிரந்தர செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கடந்த 1998-ம் ஆண்டு முதல் இன்று வரை கோவை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின்வாரியப் பிரிவு அலுவலகங்களிலும் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த தொழிலாளர்களாக மின்பணிகளை செய்து வருகின்றனர். ஆனால், கடந்த 2008-ம் ஆண்டு முதல் மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு எந்தவொரு பணிபயனும் வழங்கக் கூடாதென முடிவு செய்தது. இதற்காக 31.06.2008-ம் ஆண்டு முதல் மின்வாரியத்தில் மின்வாரிய பணிவிபரக்குறிப்பான ஏ.இ. சான்றிதழ், பி.சி.பி, சிட் ஒப்பந்தம், கே-2 ஒப்பந்தத்தில் வேலை செய்துள்ளதால் தங்களை மின்சார வாரிய நிர்வாகம் பணிநிரந்தரம் செய்திருக்க வேண்டும்.
இந்த நிலையில், ஒப்பந்த புள்ளிகள் பெற்ற ஒப்பந்ததாரரின் மூலமாக மின்சார வாரியத்தில் நேரடியாகப் பணிகள் வழங்கப்படுகின்றன. மின் ஒப்பந்தப்புள்ளி பெற்ற ஒப்பந்ததாரரின் பணி முடிவுற்ற பின்பு மறு ஒப்பந்ததாரரின் பணிகள் ஒப்படைக்கப்படுகின்றன. 1985-ம் ஆண்டிற்குப் பிறகு பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளர்கள் ஒப்பந்ததாரரின் மூலம் பணி செய்தவர்களை காலித் ஆணையத்தின் தீர்வின்படி தினக்கூவி அடிப்படையிலோ அல்லது சி.எல்.ஆர். டி.சி.எல்., முஷ்தூர் அல்லது கள உதவியாளர்களாகவோ பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். மேலும், மின்வாரிய ஆணை எண்-9, நாள் 09/10/2010-ன்படி பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ள போது அடையாளம் காணப்பட்ட ஒப்பந்த ஊழியராகக் கணக்கில் கொண்டு மின்வாரிய ஆணை எண்:110ன் படி ரூ. 1,500 கருணைத்தொகை வழங்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 1998-ம் ஆண்டு முதல் இன்று வரை கோவை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின்வாரியப் பிரிவு அலுவலகங்களிலும் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த தொழிலாளர்களாக மின்பணிகளை செய்து வருகின்றனர். ஆனால், கடந்த 2008-ம் ஆண்டு முதல் மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு எந்தவொரு பணிபயனும் வழங்கக் கூடாதென முடிவு செய்தது. இதற்காக 31.06.2008-ம் ஆண்டு முதல் மின்வாரியத்தில் மின்வாரிய பணிவிபரக்குறிப்பான ஏ.இ. சான்றிதழ், பி.சி.பி, சிட் ஒப்பந்தம், கே-2 ஒப்பந்தத்தில் வேலை செய்துள்ளதால் தங்களை மின்சார வாரிய நிர்வாகம் பணிநிரந்தரம் செய்திருக்க வேண்டும்.
இந்த நிலையில், ஒப்பந்த புள்ளிகள் பெற்ற ஒப்பந்ததாரரின் மூலமாக மின்சார வாரியத்தில் நேரடியாகப் பணிகள் வழங்கப்படுகின்றன. மின் ஒப்பந்தப்புள்ளி பெற்ற ஒப்பந்ததாரரின் பணி முடிவுற்ற பின்பு மறு ஒப்பந்ததாரரின் பணிகள் ஒப்படைக்கப்படுகின்றன. 1985-ம் ஆண்டிற்குப் பிறகு பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளர்கள் ஒப்பந்ததாரரின் மூலம் பணி செய்தவர்களை காலித் ஆணையத்தின் தீர்வின்படி தினக்கூவி அடிப்படையிலோ அல்லது சி.எல்.ஆர். டி.சி.எல்., முஷ்தூர் அல்லது கள உதவியாளர்களாகவோ பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். மேலும், மின்வாரிய ஆணை எண்-9, நாள் 09/10/2010-ன்படி பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ள போது அடையாளம் காணப்பட்ட ஒப்பந்த ஊழியராகக் கணக்கில் கொண்டு மின்வாரிய ஆணை எண்:110ன் படி ரூ. 1,500 கருணைத்தொகை வழங்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.