கோவை அருகே நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு உறவினர் போல் வந்த மர்ம நபர்கள் ரூ.50 ஆயிரம் பணம், 5 செல்போன்கள் மற்றும் சிங்கப்பூர் வீசா ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
கோவை : கோவை அருகே நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு உறவினர் போல் வந்த மர்ம நபர்கள் ரூ.50 ஆயிரம் பணம், 5 செல்போன்கள் மற்றும் சிங்கப்பூர் வீசா ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
கோவை பீளமேட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியின் போது மணமகனின் தாய் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணம், சிங்கப்பூர் செல்ல வைத்திருந்த விசா மற்றும் உறவினர்கள் வைத்திருந்த 5 செல்போன்கள் மாயமாகின. இது தொடர்பாக போத்தனூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் மண்டபத்திற்கு சென்ற போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, உறவினர்கள் போல வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இக்கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், அவர்கள் சேலம் பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றதும் தெரியவந்தது.
அந்த வாகனம் சேலத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவருக்குச் சொந்தமானது என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் தொடர்பாக, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
உறவினர் போல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பணம் மற்றும் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை பீளமேட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியின் போது மணமகனின் தாய் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணம், சிங்கப்பூர் செல்ல வைத்திருந்த விசா மற்றும் உறவினர்கள் வைத்திருந்த 5 செல்போன்கள் மாயமாகின. இது தொடர்பாக போத்தனூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் மண்டபத்திற்கு சென்ற போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, உறவினர்கள் போல வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இக்கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், அவர்கள் சேலம் பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றதும் தெரியவந்தது.
அந்த வாகனம் சேலத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவருக்குச் சொந்தமானது என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் தொடர்பாக, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
உறவினர் போல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பணம் மற்றும் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.