நீலகிரி மாவட்டத்தில் விளையும் பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயமாக ரூ.30 வழங்கக்கோரிய இறுதி போராட்டம் இன்று அதிகரட்டி பகுதியில் நடைபெற்றது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் விளையும் பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயமாக ரூ.30 வழங்கக்கோரிய இறுதி போராட்டம் இன்று அதிகரட்டி பகுதியில் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலை பிரதான விவசாயமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்குள்ள தேயிலை தூள் உள்ளூர் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில், பசுந்தேயிலைக்கு ரூ.30 விலை கோரி இன்று இறுதி கட்ட போராட்டம் அதிகரட்டி ஊராட்சிக்குட்பட்ட பாலகொலா அருகே உள்ள மகாலிங்கா தொழிற் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை முன்பு நடைபெற்றது.

இப்போராட்டத்தில் மணியட்டி, நுந்தளா, அதிகரட்டி, பால கொலா, தாம்பட்டி, உள்ளிட்ட 7 கிராம மக்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறுகையில், "அரசு தேயிலை தொழிற் சாலை நிர்வாகம் மிகவும் சீர்கேடாக உள்ளது. இதனால் இத்தொழிற்சாலைகளின் நிர்வாகத்தால் இந்த கூட்டுறவு தொழிற்சாலைகள் நலிவடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டு விவசாயிகளுக்கு விலை கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மேலும் உதகையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் பசுந்தேயிலை கிலோவிற்கு ரூ.2 மானியம் அளிப்பதாக உறுதியளித்தார். ஆனால் இதுவரை எங்களுக்கு மானியம் கிடைக்கவில்லை எனவே தமிழக முதலமைச்சர் உடனடியாக மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலை பிரதான விவசாயமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்குள்ள தேயிலை தூள் உள்ளூர் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில், பசுந்தேயிலைக்கு ரூ.30 விலை கோரி இன்று இறுதி கட்ட போராட்டம் அதிகரட்டி ஊராட்சிக்குட்பட்ட பாலகொலா அருகே உள்ள மகாலிங்கா தொழிற் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை முன்பு நடைபெற்றது.

இப்போராட்டத்தில் மணியட்டி, நுந்தளா, அதிகரட்டி, பால கொலா, தாம்பட்டி, உள்ளிட்ட 7 கிராம மக்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறுகையில், "அரசு தேயிலை தொழிற் சாலை நிர்வாகம் மிகவும் சீர்கேடாக உள்ளது. இதனால் இத்தொழிற்சாலைகளின் நிர்வாகத்தால் இந்த கூட்டுறவு தொழிற்சாலைகள் நலிவடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டு விவசாயிகளுக்கு விலை கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மேலும் உதகையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் பசுந்தேயிலை கிலோவிற்கு ரூ.2 மானியம் அளிப்பதாக உறுதியளித்தார். ஆனால் இதுவரை எங்களுக்கு மானியம் கிடைக்கவில்லை எனவே தமிழக முதலமைச்சர் உடனடியாக மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றனர்.