கஞ்சா விற்பனையை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்தாத ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்தாத ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. பள்ளி-கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்தாலும் , மாவட்டம் முழுவதும் காவல் துறை உதவியோடு கஞ்சா விற்கப்பட்டு வருகிறது என்று கூறி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்த முன்ற அக்கட்சியினரை போலீசார் கைது செய்தனர். 



இது தொடர்பாக அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் கூறுகையில், " இரண்டு முறை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் இருவரிடமும் கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்தோம். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மீண்டும் மாதம்பட்டி பகுதியில் காவல் துறையினரின் உதவியோடு கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. இதனைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டதில் ஈடுபட்டோம். 

தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட ஈஸ்வரன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...