வணிகர்களை மிரட்டி உரிமம் பெற வைக்கின்றனர்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா குற்றச்சாட்டு

தமிழகத்தில் மட்டுமே சிறு வணிகர்களை மிரட்டி உரிமம் பெற வைக்கும் நடைமுறை உள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை: தமிழகத்தில் மட்டுமே சிறு வணிகர்களை மிரட்டி உரிமம் பெற வைக்கும் நடைமுறை உள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை அவினாசி சாலையிலுள்ள தென்னிந்திய வர்த்தக சபை கூட்டரங்கில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வரும் மே 5-ம் தேதி சென்னையில் நடைபெறும் 35-வது வணிகர் தின மாநாட்டிற்கு கோவையில் இருந்து 500 வாகனங்களில் செல்வது, அத்தியாவசிய பொருட்கள் அனைத்திற்கும் ஜி எஸ் டி யிலிருந்து முழு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பன போன்ற 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில தலைவர் விக்கிரமராஜா, "அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை வணிகர்கள் மீது திணிப்பது கண்டிக்கத்தக்கது. சிறு வணிகர்களை பல இடங்களில் மிரட்டியே உரிமம் பெற வைக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் தான் இந்த நெருக்கடி இருக்கிறது. 



மேலும், கடையில் கரப்பான் பூச்சி இருந்தால் ரூ.5000 அபராதம், எலி இருந்தால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால், குடிநீரில் கலப்படம் உள்ளதை யாரும் கண்டுகொள்ளவில்லை.

அதற்காக அந்த அதிகாரிகளையும், துறை அமைச்சரையும் சிறையில் அடைக்கலாமா?. நாங்கள் பொருட்களை வாங்கி விற்பவர்கள் மட்டுமே. உற்பத்தி செய்யக்கூடிய இடத்தில் தான் பிரச்சினை உள்ளது. கலப்பட பொருள் விற்பனை என்ற பெயரில் எங்களைத் தண்டிப்பது தவறு. தமிழக அரசியலில் புதிதாக ஈடுபட்டுள்ள ரஜினியாக இருந்தாலும், கமலாக இருந்தாலும் தமிழகத்தில் உள்ள ஆறுகளை சீர் செய்ய வேண்டும். எந்த அரசாக இருந்தாலும் தமிழக அரசு நதி நீர் விஷயத்தில் நமது உரிமைகளை விட்டுக் கொடுக்க கூடாது. 

அதேபோல், தமிழக அரசு உரிமைகளுக்காக அனைத்துக் கட்சிகளையும் கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பு எப்போதும் அதற்கு துணை நிற்கும்." என்றார்.

Newsletter

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...