குழந்தையின் கைப்பிடித்து இழுத்தவருக்கு தர்ம அடி கொடுத்த திருப்பூர் வாசிகள்

குழந்தையின் கைப்பிடித்து இழுத்தவரை, கடத்த வந்ததாக நினைத்து திருப்பூர் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: குழந்தையின் கைப்பிடித்து இழுத்தவரை, கடத்த வந்ததாக நினைத்து திருப்பூர் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

திருப்பூர் அவினாசி நகர் பகுதியில் வசிக்கும் கட்டிடத் தொழிலாளிக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார். நேற்று பள்ளி விடுமுறை தினம் என்பதால் குழந்தைகள் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த பூமிநாதன் என்பவர் சிறுமியின் கையைப் பிடித்து இழுத்துள்ளார். 

இதனால், குழந்தை கூச்சலிடவே அப்பகுதி பொதுமக்கள் பூமிநாதன் மீது சந்தேகமடைந்து அவரைப் பிடிக்க முயன்றனர். பொதுமக்களைக் கண்டு பயந்து போன பூமிநாதன் அங்குள்ள மறைவுப் பகுதிக்குள் புகுந்துள்ளார். உடனடியாக அவரைப் பிடித்த பொதுமக்கள் பூமிநாதனை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.



இது தொடர்பாக தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடமிருந்து பூமிநாதனை மீட்டு விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச்சென்றனர்.

போலீசார் விசாரணையில் பூமிநாதன் குழந்தையைக் கடத்த வரவில்லை என்பதும். விளையாட்டாக கைபிடித்து இழுத்ததை தவறாக நினைத்துக்கொண்டு பொதுமக்கள் அடித்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார். 

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...