அரசின் தாய்சேய் நல சிறப்பு முகாமில் பயனடைந்த கர்ப்பிணி பெண்கள்

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசின் சார்பில் நடைபெற்ற தாய்சேய் நல சிறப்பு முகாமில் ஏராளமான கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் அரசின் சார்பில் நடைபெற்ற தாய்சேய் நல சிறப்பு முகாமில் ஏராளமான கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். 

தமிழக அரசின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் தாய்சேய் நல சிறப்பு முகாம் வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. கோவை மாவட்ட துறையின் துணை சுகாதார துறை இயக்குநர் பானுமதி தலைமையில் நடந்த இந்த சிறப்பு முகாமை, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு துவக்கி வைத்தார். இம்முகாமில் மகப்பேறு சிறப்பு மருத்துவர் ஜனனி கர்ப்பகால பரிசோதனையும், ஸ்கேன் பரிசோதனையும் செய்து ஆலோசனைகள் வழங்கினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் விழிப்புணர்வு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முகாம் ஏற்பாட்டினை வால்பாறை வட்டார மருத்துவ அலுவலர் வு.பிரவீன் மற்றும் சுகாதார பணியாளர்கள் செய்தனர்.

முகாமில் 130 கர்ப்பிணி தாய்மார்களும், 65 பாலூட்டும் தாய்மார்களும், 58 குழந்தைகளும் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். முகாமில் கலந்து கொண்ட கர்ப்பிணி தாய்மார்கள் அனைவருக்கும் சிறப்பான மதிய உணவு வழங்கப்பட்டது. வால்பாறையில் இம்முகாமினை சிறந்த முறையில் ஏற்பாடு செய்ததாகவும், இது தங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்ததாகவும் கர்ப்பிணி தாய்மார்கள் தெரிவித்தனர். இதில், வால்பாறை நகர செயலாளர் மயில்கணேசன், அண்ணா தோட்ட தொழிலாளர் சங்க தலைவர் அமீது, மிச்சர்கடை முருகன், வழக்கறிஞர் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...