வனவிலங்குகளை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மனிதசங்கிலி

கோவையில் வனஉயிரின பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, வனவிலங்குகள் வாகனங்களில் மோதி உயிரிழப்பதைத் தடுக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மனிதசங்கிலி நடத்தப்பட்டது.

கோவை : கோவையில் வனஉயிரின பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, வனவிலங்குகள் வாகனங்களில் மோதி உயிரிழப்பதைத் தடுக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மனிதசங்கிலி நடத்தப்பட்டது. 

 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி மற்றும் உதகை செல்லும் மலைச் சாலைகளில் வாகனம் மோதி மான், குரங்கு காட்டெருமை போன்ற வன உயிரினங்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் இவ்வழியே செல்லும் சுற்றுலா பயணிகள் வனச்சாலை ஓரங்களில் உணவுப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை வீசி எறிவதே ஆகும். மேலும், சிலர் சாலை ஓரங்களில் நிற்கும் குரங்குகள் மற்றும் மான்களுக்கு தங்களிடம் உள்ள உணவு பொருட்களை கொடுப்பதால் இப்பகுதி சாலைகளில் விலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. 

பயணிகள் வீசும் வீணான உணவு பொருட்களை உண்ணும் நோக்கத்தோடு சாலையில் திரியும் இதுபோன்ற விலங்குகள் வாகனம் மோதி உயிரிழப்பது அடிக்கடி நடந்து வரும் நிகழ்வாகி மாறி வருகின்றது. இதனைத் தடுக்கும் நோக்கத்தோடு தமிழ்நாடு வனத்துறை மற்றும் வன உயிரின ஆர்வலர்கள் இணைந்து வன உயிரின பாதுகாப்பு நாளான இன்று பொதுமக்களிடம் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த மனித சங்கிலி நடத்தினர்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் சாலையில் கல்லார் பகுதியில் சாலையின் ஓரத்தில் ஏராளமானோர் விழிப்புணர்வு மனித சங்கிலியில் கலந்து கொண்டு, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி அவ்வழியே செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நின்றனர். பின்னர், அவ்வழியே செல்லும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். சாலை ஓர விலங்குகளுக்கு உணவு கொடுப்பதும், வனப்பகுதியை ஒட்டி வாகனங்களை நிறுத்துவதும் வனசட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதை வனத்துறையினரும் அறிவுறுத்தினர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வனத்துறையினர் மற்றும் வன உயிரின ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...