காவிரி விவகாரத்தில் சந்திக்க மறுப்பது வேதனையளிக்கிறது : முதலமைச்சருடனான சந்திப்புக்கு பின் ஸ்டாலின் பேட்டி

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் கட்சியினரை பிரதமர் சந்திக்க மறுப்பது வேதனையளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பிற்கு பிறகு எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் கட்சியினரை பிரதமர் சந்திக்க மறுப்பது வேதனையளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பிற்கு பிறகு எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். 

காவிரி நதிநீர் பிரச்னையில் கடந்த மாதம் 16-ம் தேதி உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. அதில், காவிரி நடுவர் மன்றம், தமிழகத்திற்கு நிர்ணயித்திருந்த நீரின் அளவில் 14.75 டி.எம்.சி.,யை குறைத்து 177.25 டி.எம்.சி., வழங்க உத்தரவிட்டதுடன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஆலோசிக்க கர்நாடகாவில் வரும் 7-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளார். 

இந்நிலையில், காவிரி விவகாரத்தில் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் பழனிசாமி, தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் மற்றும் தி.மு.க., துரைமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:- காவிரி பிரச்னை குறித்து பேச நேரம் கேட்டபோது, பிரதமர் சந்திக்க மறுப்பதாகவும், அந்த துறை அமைச்சரை வேண்டுமானால், சந்தியுங்கள் என்றும் பிரதமர் அலுவலகத்தில் கூறுகிறார்கள். என்ன செய்யலாம் என முதலமைச்சர் என்னிடம் கேட்டார். முதலமைச்சர் பழனிசாமி தனியாக சென்றாலோ, துணைமுதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துடன் தனியாக சென்றாலோ சந்திக்கும் பிரதமர், முக்கிய பிரச்சினையான காவிரி விவகாரம் தொடர்பாக சந்திக்க மறுப்பது ஏன்..?. வரும் திங்கட்கிழமைக்குள் பிரதமரிடம் இருந்து அழைப்பு வராவிட்டால், வரும் 8-ம் தேதி சட்டசபை கூட்டப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார். பிரதமர் சந்திக்க மறுத்தால் தமிழக எம்.பி.,க்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வார்கள் என பிரதமருக்கு அழுத்தம் தர வேண்டும் என முதலமைச்சரிடம் கூறினேன். இவ்வாறு கூறினார்.

பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். முதலமைச்சர் தலைமையிலான அனைத்து கட்சி தலைவர்கள் குழுவை சந்திக்க பிரதமர் மறுத்துவிட்டார் என்பது தவறான தகவல். முதலில் துறை அமைச்சரை சந்திக்க வேண்டும் என்று தான் கூறப்பட்டது. அமைச்சரை சந்தித்த பின்னர் பிரதமரை சந்திக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது," என்றார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...