கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சென்னை அப்போலா மருத்துவமனையில் அனுமதி

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் கேரளாவில் முதலமைச்சராக பினராயி விஜயன் இருந்து வருகிறார். தற்போது 72 வயதான அவர், நேற்று கேரள மாநிலம் அட்டப்பாடிக்கு சென்றார். கடந்த 22-ம் தேதி கொல்லப்பட்ட மது என்ற பழங்குடி இளைஞரின் வீட்டுக்கு அரசு அதிகாரிகளுடன் சென்று ஆறுதல் கூறினார். பின்னர், அங்கு பல்வேறு ஆய்வுகளும் நடத்தினார். இந்த நிலையில், இன்று அதிகாலை 2.20 மணி அளவில் பினராயி விஜயனுக்கு ரத்த அழுத்தம் குறைந்ததாகவும், அதன் காரணமாக சென்னை கொண்டுவரப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதுகுறித்த மற்ற விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக வட்டாரங்கள் கூறுகையில், "தோழர் பினராயி விஜயன் வழக்கமாக மேற்கொள்ளும் பரிசோதனைகள்தான் இவை. அவருக்குத் தெரிந்த மருத்துவர்கள் சிலர் சென்னை அப்போலோவில் பணிபுரிகிறார்கள். அதனாலேயே, அவர் அப்போலோ மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காகச் சென்றுள்ளார். அவருக்கு எந்த உடல்நிலைக் குறைபாடும் இல்லை" என்றனர்.

இதுதொடர்பாக அப்போலோ மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :- கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வருடாந்திர உடல் பரிசோதனைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோதனைகள் முடிந்து அவர் நாளை (மார்ச் 04) டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...