நீலகிரி மாவட்டத்தில் உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில், நடவு செய்யப்பட்ட ரோஜா செடிகளில் மலர்கள் பூக்கத் துவங்கியுள்ளன.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில், நடவு செய்யப்பட்ட ரோஜா செடிகளில் மலர்கள் பூக்கத் துவங்கியுள்ளன.

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இச்சமயங்களில் வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை புரிகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா போன்ற சுற்றுலா தலங்களில் மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதற்காக, பல்வேறு வகையிலான ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.
உதகைக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில், உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் 27 ஆயிரம் செடிகளில் வெள்ளை, ஊதா, பச்சை, சிவப்பு, மஞ்சள் போன்ற வண்ணங்களில் 4 ஆயிரம் ரகங்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ரோஜா மலர்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, ரோஜா பூங்காவின் ஒவ்வொரு பகுதியாக ரோஜா மலர்கள் பூக்க துவங்கியுள்ளது. இது உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கண்களை கவரும் வண்ணம் உள்ளது.

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இச்சமயங்களில் வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை புரிகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா போன்ற சுற்றுலா தலங்களில் மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதற்காக, பல்வேறு வகையிலான ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.
உதகைக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில், உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் 27 ஆயிரம் செடிகளில் வெள்ளை, ஊதா, பச்சை, சிவப்பு, மஞ்சள் போன்ற வண்ணங்களில் 4 ஆயிரம் ரகங்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ரோஜா மலர்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, ரோஜா பூங்காவின் ஒவ்வொரு பகுதியாக ரோஜா மலர்கள் பூக்க துவங்கியுள்ளது. இது உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கண்களை கவரும் வண்ணம் உள்ளது.