திருப்பூர் மாவட்டத்தில் தாக்குதல் நடத்திய டாஸ்மாக் கடையின் பார் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தாக்குதல் நடத்திய டாஸ்மாக் கடையின் பார் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பி.என்.ரோடு, நெசவாளர் காலனி பகுதியில் டாஸ்மாக் பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், நேற்று மாலை டாஸ்மாக் பாரில் மது அருந்த சென்றவர்களுக்களுக்கும், பார் ஊழியர்களுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது, இரு தரப்பினரும் மாறி மாறித் தாக்கிக் கொண்டனர். இதில் பாரில் இருந்த நாற்காலி மற்றும் கண்ணாடி கதவுகள் உடைக்கப்பட்டன. மேலும், பார் உரிமையாளர் குட்டி என்பவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்றொரு தரப்பைச் சேர்ந்த இளங்கோ, சிவக்குமார் ஆகியோருக்கு தலையில் காயம் ஏற்பட்டதையடுத்து, இரு தரப்பினரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இளங்கோ, சிவக்குமார் ஆகியோரின் உறவினர்கள், பார் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பி.என். சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடக்கு போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி, சம்பவம் குறித்து இரு தரப்பிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தின் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

பி.என்.ரோடு, நெசவாளர் காலனி பகுதியில் டாஸ்மாக் பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், நேற்று மாலை டாஸ்மாக் பாரில் மது அருந்த சென்றவர்களுக்களுக்கும், பார் ஊழியர்களுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது, இரு தரப்பினரும் மாறி மாறித் தாக்கிக் கொண்டனர். இதில் பாரில் இருந்த நாற்காலி மற்றும் கண்ணாடி கதவுகள் உடைக்கப்பட்டன. மேலும், பார் உரிமையாளர் குட்டி என்பவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்றொரு தரப்பைச் சேர்ந்த இளங்கோ, சிவக்குமார் ஆகியோருக்கு தலையில் காயம் ஏற்பட்டதையடுத்து, இரு தரப்பினரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இளங்கோ, சிவக்குமார் ஆகியோரின் உறவினர்கள், பார் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பி.என். சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடக்கு போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி, சம்பவம் குறித்து இரு தரப்பிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தின் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.