டாஸ்மாக் பாரில் மோதல் : காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்

திருப்பூர் மாவட்டத்தில் தாக்குதல் நடத்திய டாஸ்மாக் கடையின் பார் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தாக்குதல் நடத்திய டாஸ்மாக் கடையின் பார் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 



பி.என்.ரோடு, நெசவாளர் காலனி பகுதியில் டாஸ்மாக் பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், நேற்று மாலை டாஸ்மாக் பாரில் மது அருந்த சென்றவர்களுக்களுக்கும், பார் ஊழியர்களுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது, இரு தரப்பினரும் மாறி மாறித் தாக்கிக் கொண்டனர். இதில் பாரில் இருந்த நாற்காலி மற்றும் கண்ணாடி கதவுகள் உடைக்கப்பட்டன. மேலும், பார் உரிமையாளர் குட்டி என்பவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்றொரு தரப்பைச் சேர்ந்த இளங்கோ, சிவக்குமார் ஆகியோருக்கு தலையில் காயம் ஏற்பட்டதையடுத்து, இரு தரப்பினரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 



இந்த நிலையில், இளங்கோ, சிவக்குமார் ஆகியோரின் உறவினர்கள், பார் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பி.என். சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடக்கு போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி, சம்பவம் குறித்து இரு தரப்பிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தின் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...