கோவையில் சிரியா இனப்படுகொலையில் பலியான மக்களுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கோவை: கோவையில் சிரியா இனப்படுகொலையில் பலியான மக்களுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சிரியாவின் கிழக்கு கவுட்டா பகுதியில் வசிக்கும் மக்களை ரஷ்யா, அமெரிக்காவின் துணையோடு சிரியா அரசு, கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் ரஷ்யா போர் விமானங்களுடன் சேர்ந்து சிரியா படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலின் போது, வீசப்பட்ட அபாயகரமான வெடிகுண்டு மற்றும் ரசாயன தாக்குதலுக்கு லட்சக்கணக்கான மக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பலியாகினர்.
சிரியா அரசின் இந்த தண்மூடித்தனமான தாக்குதலைக் கண்டிக்கும் விதமாக, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக காந்திபுரத்திலுள்ள பெரியார் படிப்பகத்தின் முன் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியும், பாதிக்கப்பட்ட சிரியா குழந்தைகளைப் போல, குழந்தைகளைச் சித்தரித்து அஞ்சலி செலுத்தினர். மேலும், சிரியா மண்ணை விட்டு அமெரிக்காவையும், ரஷ்யாவையும் வெளியேற்ற ஐ.நா. மன்றம் தலையிடக்கோரியும், சிரியா ரத்தம், எங்கள் ரத்தம் எனவும், அப்பாவி மக்களைக் கொல்லும் அமெரிக்காவும், ரஷ்யாவும் பயங்கரவாதிகள் என கோசங்களை எழுப்பினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் பேசுகையில், "8 ஆண்டுகளாக சிரியா அரசும், ரஷ்யா, அமெரிக்கா இணைந்து லட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்துள்ளனர். மேலும், 3,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுக்காமல் ஐ.நா. மன்றம் தயங்கி நிற்கின்றது. வல்லரசு நாடுகள் பெட்ரோலிய பொருட்களை கொள்ளை அடிக்கும் நோக்கில் செயல்படுகின்றன. சிரியா மக்கள் அகதிகளாக வந்தால் உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த உலக மக்களும் திரண்டு எழுந்தால் சிரியாவில் நடக்கும் போரை தடுத்து நிறுத்த முடியும்,'' என்றார்.
சிரியாவின் கிழக்கு கவுட்டா பகுதியில் வசிக்கும் மக்களை ரஷ்யா, அமெரிக்காவின் துணையோடு சிரியா அரசு, கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் ரஷ்யா போர் விமானங்களுடன் சேர்ந்து சிரியா படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலின் போது, வீசப்பட்ட அபாயகரமான வெடிகுண்டு மற்றும் ரசாயன தாக்குதலுக்கு லட்சக்கணக்கான மக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பலியாகினர்.
சிரியா அரசின் இந்த தண்மூடித்தனமான தாக்குதலைக் கண்டிக்கும் விதமாக, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக காந்திபுரத்திலுள்ள பெரியார் படிப்பகத்தின் முன் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியும், பாதிக்கப்பட்ட சிரியா குழந்தைகளைப் போல, குழந்தைகளைச் சித்தரித்து அஞ்சலி செலுத்தினர். மேலும், சிரியா மண்ணை விட்டு அமெரிக்காவையும், ரஷ்யாவையும் வெளியேற்ற ஐ.நா. மன்றம் தலையிடக்கோரியும், சிரியா ரத்தம், எங்கள் ரத்தம் எனவும், அப்பாவி மக்களைக் கொல்லும் அமெரிக்காவும், ரஷ்யாவும் பயங்கரவாதிகள் என கோசங்களை எழுப்பினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் பேசுகையில், "8 ஆண்டுகளாக சிரியா அரசும், ரஷ்யா, அமெரிக்கா இணைந்து லட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்துள்ளனர். மேலும், 3,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுக்காமல் ஐ.நா. மன்றம் தயங்கி நிற்கின்றது. வல்லரசு நாடுகள் பெட்ரோலிய பொருட்களை கொள்ளை அடிக்கும் நோக்கில் செயல்படுகின்றன. சிரியா மக்கள் அகதிகளாக வந்தால் உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த உலக மக்களும் திரண்டு எழுந்தால் சிரியாவில் நடக்கும் போரை தடுத்து நிறுத்த முடியும்,'' என்றார்.