காவல்நிலைய வளாகத்தில் தீ குளித்து வாலிபர் பலி

தர்மபுரி மாவட்டத்தில் மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், காவல்நிலையத்தில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி மாவட்டத்தில் மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், காவல்நிலையத்தில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். 

பென்னாகரம் தாலுகா மஞ்சாரஅள்ளி பஞ்சாயத்து மஞ்சாரபட்டிகாடு கிராமத்தைச் சேர்ந்த மாது என்பவரின் மகன் ஆசைத்தம்பி (36). கடன் தொல்லையால் ஏற்பட்ட கருத்து வேற்பாட்டால் ஆசைத்தம்பியின் மனைவி பழனியம்மாள் பிரிந்து சென்றார். இதனால், தனியாக வாழ்ந்து வந்த அவர், சமீபகாலமாக மனமுடைந்து காணப்பட்டார். 

இதனிடையே, கடன் பிரச்சினை தொடர்பாகவும், மனைவியை சேர்த்து வைக்கக் கோரியும், ஒரு மாதத்திற்கு முன் ஏரியூர் போலீசில் ஆசைத்தம்பி புகார் அளித்துள்ளார். இதற்கு, பேசி தீர்த்துக் கொள்ளலாம் எனக் கூறி போலீசார் அலட்சியம் காட்டியுள்ளனர். இதனால், அதிருப்தியடைந்த அவர், 15 நாட்களுக்கு முன், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றபோது காப்பாற்றப்பட்டார். இந்த நிலையில், நேற்று மாலை, 4:20 மணிக்கு ஏரியூர் காவல்நிலைய வளாகத்திற்கு வந்த ஆசைத்தம்பி, பெட்ரோலை, தன் மீது ஊற்றித் தீ வைத்து கொண்டார். இதில், உடல் முழுவதும் தீ பற்றி, அங்கேயே இறந்தார். அவரைக் காப்பாற்ற போலீசார் முயன்றும் பலனில்லை. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...